
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!
நித்யாய ஸுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம ஸிவாய!!
பொருள்: பாம்பை மாலையாக அணிந்தவரே! மூன்று கண்களை உடையவரே! திருநீறு பூசியவரே! மகேஸ்வரரே! என்றும் நிலையானவரே! தூய்மை மிக்கவரே! திசைகளை ஆடையாக உடுத்தியவரே! பஞ்சாட்சர மந்திரத்தில் (நமசிவாய) முதல் எழுத்தான 'நகார' வடிவமாகத் திகழும் சிவனே! உம்மை வணங்குகிறேன்.