ADDED : அக் 09, 2024 01:44 PM

சந்நியாசி யார்?
பள்ளி விடுமுறை என்பதால் ஞாயிறு அன்று காலையில் தாத்தாவை தேடிச் சென்றான் கந்தன்.
அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அவனைக் கண்டதும், 'என்ன கந்தா' என கேட்டுக் கொண்டே அருகில் வந்தார். ''நேத்து அந்த காலத்து சினிமா ஒன்றை பார்த்தேன். அதில் வந்த துறவி கையில் கமண்டலம்னு ஒரு பாத்திரம் வச்சிருந்தார். ஜடாமுடி நீளமாக இருந்தது. ஆரஞ்சு கலர் டிரஸ் போட்டிருந்தார். ஆனா நீங்க ஏன் அதெல்லாம் போட்டுக்கல? அதுவும் இல்லாம நீங்க வயலில் வேலை செய்றீங்க. பகவத் கீதையில இத பத்தி ஏதாவது சொல்லி இருக்கா தாத்தா'' எனக் கேட்டான்.
''கிருஷ்ணர் 6ம் அத்தியாயம் முதல் ஸ்லோகத்தில்
ஸ்ரீப4க³வாநுவாச
அநாஸ் ²ரித: கர்மப ²லம் கார்யம் கர்ம கரோதி ய:|
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ³ ச ந நிரக்³நிர்ந சாக்ரிய:
||6-1||
பலன் கருதாமல் செயல்படுபவனே துறவி. அவனே யோகி. தனக்கென பணிகளைச் செய்யாதவனும், தீயை வளர்க்காதவனும் துறவியாக மாட்டார்கள்.
இதை திருவள்ளுவர்
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர் - 365
(அவா அறுத்தல் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் பற்று அற்ற துறவிகளைப் பற்றிக் கூறுகிறது. பற்று அற்றவர் எனப்படுபவர் ஆசை அற்றவராக இருப்பர். ஆசை இல்லாத மற்றவர்கள் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
ஆசை இல்லாதவரே துறவி. தனக்குரிய கடமையைச் செய்யாதவர் துறவி ஆக மாட்டார். இப்ப புரிஞ்சுதா நம்ம வேலையை நம்ம தான் செய்யணும்னு.'
'ரொம்ப நல்ல புரிஞ்சுது தாத்தா. சரி நான் போயிட்டு வரேன்' என்று கந்தன் விடை பெற்றான்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554