ADDED : டிச 20, 2024 10:49 AM

கடவுளின் துாதர்
பெருமாள் கோயிலுக்கு ராமசாமி தாத்தாவும் சிறுவன் கந்தனும் சென்றார்கள். அப்போது அங்கிருந்த துறவியிடம் ஆசி பெற்றார் தாத்தா.
அதைப் பார்த்த கந்தன், ''உங்களை விட வயசில சின்னவரா இருக்காரு. அவரின் காலில் விழுறீங்களே'' எனக் கேட்டான். 'கடவுளின் துாதர் அவர்' என்றார் தாத்தா.
''நாமும் தினமும் கோயிலுக்கு போறோம். பூஜை செய்பவர்கள், கோயிலை சுத்தம் செய்பவர்கள் என எத்தனையோ பேர் கடவுளுக்கு தொண்டு செய்றாங்க. அவர்களும் துாதர்கள் தானே'' எனக் கேட்டான்.
தாத்தா சிரித்துக் கொண்டே, ' அவர்கள் இப்போது தான் பக்தியின் முதல் படியில் கால் வைத்திருக்கிறார்கள்.
கடவுளை அடையும் வழியில் கடைசிப்படியில் துறவி நிற்கிறார்'' என்றார்.
''பார்ப்பதற்கு நம்ம மாதிரி தானே துறவியும் இருக்காரு. என்ன அவர் மட்டும் காவி டிரஸ்ல இருக்காரு. வேற வித்தியாசம் தெரியலை'' என்றான் கந்தன்.
''சரி... அவரோட கண்ணை உற்றுப்பாரு'' என்றார். அதை பார்த்த கந்தன், ''அவரோட கண்கள் காந்தம் போல இழுக்குது'' என்றதோடு, '' துறவிகளைப் பற்றி கிருஷ்ணரும், திருவள்ளுவரும் என்ன சொல்றாங்க '' எனக் கேட்டான். பகவத் கீதையின் 10ம் அத்தியாயம் 3 வது அடியைக் குறிப்பிட்டார்.
யோ மாமஜமநாதி ³ம் ச வேத்தி லோகமஹேஸ் ²வரம் |
அஸம்மூட4: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||
பிறப்பு, இறப்பு, ஆரம்பம், முடிவு இல்லாதவனாகவும், பிரபஞ்சத்தின் பரமாத்மாவாகவும் இருக்கும் என்னை உணர்ந்தவர்கள் மாயையில் இருந்து விடுபடுவர். எல்லாத் தீமைகளில் இருந்தும் விலகுவர்.
திருவள்ளுவர் 358 வது திருக்குறளில்,
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
எனக் குறிப்பிடுகிறார்.
பிறவித்துன்பம் ஏற்படக் காரணம் அறியாமை. இது நீங்கவும், முக்தி என்னும் உயர்ந்த நிலைக்குக் காரணமான பரம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு என்கிறார் திருவள்ளுவர் செம்பொருள் என்பது பிறப்பு, இறப்பு, ஆரம்பம், முடிவு இல்லாதவராகவும், பிரபஞ்சத்தின் பரமாத்மாவாகவும் இருக்கும் கடவுளைக் குறிக்கும். அவரைக் காண மெய் உணர்வு வேண்டும். அந்த தகுதி கொண்டவரையே துாதர் என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554