
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியில் 11 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ராமர், தன் அவதாரம் முடிந்து விண்ணுலகம் கிளம்பினார். அப்போது அயோத்திவாசிகள் அனைவரும் அவருடன் வைகுண்டம் புறப்பட தயாராயினர். ஆனால் அனுமன் மட்டும் அதை விரும்பவில்லை.
“சுவாமி! வைகுண்டத்தில் நாராயண நாமம் வேண்டுமானால் கேட்கும். ஆனால் பூலோகத்தில் இருந்தால் ராம நாமம் ஜபிக்கலாம். எனவே எனக்கு வைகுண்டம் வேண்டாம். பூலோகத்தில் இருந்து ராம நாமத்தை ஜபித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்'' என்றார்.
அனுமனை வழிபடும்
போது வெறுமனே 'ஆஞ்சநேயா' என அழைக்காமல் 'ராம தாச ஆஞ்சநேயா' என்று அழைத்தால் மகிழ்ச்சி அடைவார் என்கிறார்கள் மகான்கள்.

