ADDED : பிப் 19, 2026 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவேகானந்தர் காவியுடை அணிந்து தலைப்பாகையுடன் ஒருமுறை ரயிலில் சென்ற போது, இரண்டு ஆங்கிலேயர்கள் பயணம் செய்தனர். ஆங்கிலம் தெரியாதவர் என கருதிய அவர்கள் விவேகானந்தரின் துறவுக்கோலத்தை கிண்டல் செய்தனர்.
ஒரு ஊரில் ரயில் நின்றபோது, அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம், ''குடிக்க தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.
இதைக் கேட்ட ஆங்கிலேயர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
''உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தும், நாங்கள் கேலி பேசிய போது ஏன் பேசாமல் இருந்தீர்கள்'' எனக் கேட்டனர்.
''முட்டாளிடம் நான் பேசுவதில்லை'' என்றார்.
அவர்கள் தலைகுனிந்தனர். தோற்றத்தை வைத்து யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

