sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மிருகசீரிட நட்சத்திரத்தினரே...

/

மிருகசீரிட நட்சத்திரத்தினரே...

மிருகசீரிட நட்சத்திரத்தினரே...

மிருகசீரிட நட்சத்திரத்தினரே...


ADDED : ஏப் 26, 2024 01:38 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிரகசன் என்னும் காபாலிகனுக்கு (நரபலி கொடுப்பவன்) ஆதிசங்கரர் கதை ஒன்றைச் சொன்னார்.

வேடன் ஒருவன் மானை பிடிக்க முயன்றபோது, அதன் கொம்பு கொடி ஒன்றில் சிக்கியது. பின் அதைக் கொல்ல முயன்றபோது 'கொஞ்சம் பொறு. என் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்து உனக்கு உணவாகிறேன்' என்றது. அரைகுறை மனதுடன் வேடனும் அதை அனுப்பி வைத்தான்.

சற்று நேரத்தில் ஆண் மானுடன் பெண் மானும் அதன் இரு குட்டிகளும் அவன் முன் வந்து நின்றன.

'ஒருவரை விட்டு ஒருவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடு' என்று வேடனிடம் சொன்னது பெண்மான். இதைக் கேட்ட வேடன் மனமிரங்கினான். அம்பும், வில்லும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட சிவபெருமான் அம்பிகையோடு எழுந்தருளி வேடனுக்கு மோட்சமளித்தார். மான்களுக்கு நட்சத்திரப்பதவி அளித்தார். அவை வானமண்டலத்தில் மிருகசீரிடம் நட்சத்திரமாக மின்னியது. இந்நட்சத்திரத் தொகுதியில் நான்கு நட்சத்திரங்கள் உள்ளன.

மிருகசீரிட நட்சத்திரத்தினர் வாக்குத் தவறாததோடு, பாசத்திற்கு கட்டுப்படுபவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us