sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

உயர உயர போகலாம்!

/

உயர உயர போகலாம்!

உயர உயர போகலாம்!

உயர உயர போகலாம்!


ADDED : செப் 24, 2013 01:03 PM

Google News

ADDED : செப் 24, 2013 01:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ஏழை விவசாயி தனது குடும்பத்துக்குப் போக, மீதி காய்கறிகளை தானமாக வழங்கி வந்தான். இது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. மீதி காய்கறியை விற்றால், பணம் கிடைக்குமே! கஷ்டநிலை தீருமே!'' என்றாள்.

''அடியே! தானம் செய்வது நமது சாஸ்திரம் வகுத்த விதி. எல்லாவற்றையும் நாமே தின்று விட்டால், எப்படி மோட்சத்தை அடைவதாம்! இந்தப் பிறவிக் கடலுக்குள்ளே தானே கிடந்து உழல வேண்டும்,'' என்று பதில் சொன்னான். அவளுக்கு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. அதற்கு மேல், அவளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்த பிறவியில், அந்த விவசாயி, தன் தர்மத்தின் பலனாய் அரசனாகப் பிறந்தான். அவனுக்கு முற்பிறவியில் வாய்த்த மனைவியே அமைந்தாள். ஒருமுறை, அவளுக்கு முன்ஜென்ம நினைவு வந்தது.

அந்த அடிப்படையில்,''நீங்கள் போன பிறவியில் காய்கறி தானம் செய்ததால், அரசனாகப் பிறந்தீர்கள்! இந்தப்பிறவியிலும் அதையே செய்யலாமே!'' என்றாள். அவள் சொன்னதற்கு காரணம் பேராசை. அடுத்த பிறவியில், இதை விட வசதியாக வாழலாம் என்று நினைத்தாள். அரசனும் அப்படியே செய்தான்.

ஆனால், அரசனும், அரசியும் இறந்து மீண்டும் ஏழையாகவே பிறந்தார்கள். ஒரு துறவியிடம் தங்கள் நிலை பற்றி சொன்னார்கள்.

''மகனே! ஏழையாய் இருந்த போது காய்கறி தானம் செய்தது சரியே! அரசனாய் இருந்த போது, உன் வசதிக்கேற்ப தங்கமும், வைரமுமாய் தானம் செய்திருக்கலாமே! தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம் செய்பவனே ஒவ்வொரு பிறவியிலும் உயர்கதியை அடைய முடியும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us