sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தண்டனை யாருக்கு

/

தண்டனை யாருக்கு

தண்டனை யாருக்கு

தண்டனை யாருக்கு


ADDED : பிப் 27, 2018 09:54 AM

Google News

ADDED : பிப் 27, 2018 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவணன் சகோதரர் விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறை பிடித்ததாக ராமர் கேள்விப்பட்டார். நேரில் சென்ற ராமர், கட்டப்பட்ட நிலையில் விபீஷணன் இருப்பது கண்டு அதிர்ந்தார்.

ராமரை கண்ட அந்தணர்கள் பணிவுடன் வணங்கினர். பழங்கள் அளித்து உபசரித்தனர்.

விபீஷணரை தேடியே ராமர் வந்திருப்பதை உணர்ந்து, ''சுவாமி! தர்ப்பை சேகரிக்க முதிய அந்தணர் ஒருவர் காட்டுக்கு வந்திருந்தார். எப்போதும் மவுன விரதமிருக்கும் அவரைக் கண்ட விபீஷணன் பேச முயற்சித்த போது, அவர் பொருட்படுத்தவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் காலால் உதைக்க, அந்தணர் உயிர் துறந்தார். அதனால் இவனைக் கட்டி வைத்த சமயத்தில் உத்தமரான நீங்களே வந்து விட்டீர்கள். இவனுக்கு தண்டனை வழங்குங்கள்'' என்றனர்.

ராமர், “இவன் என் பணியாளன். பணியாளனின் செயலுக்கு எஜமானனே பொறுப்பு என்பதால் இவனுக்குரிய தண்டனையை நான் ஏற்பது தான் சரி” என்றார். அதை கேட்ட அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது.

விபீஷணனுக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை என்பதையும், அந்தணரின் மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். ராமருடன் விபீஷணனை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us