
* பணிவும் எளிய வாழ்க்கையும் இருந்தால் நீயும் தெய்வமாக மாறலாம்.
* மனத்துாய்மை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீ கடவுளை அடைவாய்.
* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்புடைமை, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.
* உனது கொள்கைகளுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இரு. அப்பொழுது தான் ஆன்மிகத்தில் வெற்றியடைய முடியும்.
* கருணையே உயர்வான குணம், குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி, ஆன்மிகமே மேலான பொருள்.
* மன அமைதியை கொண்டவரிடத்தில் ஆனந்தம் குடி கொண்டிருக்கும்.
* சந்தனக்கட்டை மணம் வீசுவதுபோல் நல்ல குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம் கோயிலுக்கு நிகராகும்.
* சத்தியம், நியாயம், விவேகம் ஆகிய மூன்றையும் மூச்சாக கொண்டவரிடம் அமைதி, சக்தி, சந்தோஷம் தானாக உயரும்.
* நடைமுறையில் ஆன்மிக கட்டுப்பாடு இருந்தால் தான் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியும்.
* செயலும் அதற்கான வினையும், சமமாகவும் எதிராகவும் இருக்கின்றன. எனவே யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதே.
* உலகமாகிய பெருங்கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள் தான் உள்ளன. ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.
என்கிறார் சிவானந்தர்