ADDED : செப் 30, 2020 06:30 PM

* அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.
* கடவுளை அடைய பக்தி ஒன்றே சிறந்த வழி.
* நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
* தவறுகளை ஏற்றுக் கொண்டு உன்னை நீயே திருத்து.
* பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் இருக்கிறது.
* எந்த சூழ்நிலையிலும் மனஅமைதியை இழக்காதே.
* கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி.
* கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
* அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அர்ப்பணிப்புடன் செய்.
* இன்பம், துன்பம், புகழ், இகழ் இரண்டையும் சமமாக கருது.
* குறிக்கோளை அடைவது யாருக்கும் எளிதானது அல்ல.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
* கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம்.
* தீயவர்களிடமும் நன்மை இருக்கலாம். ஒழுக்க சீலர்களிடமும் தீமை இருக்கலாம்.
* எண்ணம், சொல், செயலில் நேர்மை இருந்தால் வாழ்வில் அமைதி இருக்கும்.
எச்சரிக்கிறார் அரவிந்தர்