ADDED : செப் 30, 2020 06:30 PM

* குறிக்கோள் நோக்கி ஓடு. உலகம் உன் காலடியில்!
* உலகம் என்னும் பயிற்சிக் கூடத்தில் வலிமை பெற நீ வந்திருக்கிறாய்.
* ஒவ்வொரு மனிதனும் சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்ய வேண்டும்.
* உன்னிடம் உள்ள மிருக சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்று.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்; அதில் மனதை ஒருமுகப்படுத்து.
* உறுதியுடன் போராடினால் பாம்பின் விஷம் கூட சக்தியை இழக்கும்.
* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! நீ தான் உனக்கு நீதிபதி.
* கத்தி முனையில் நடப்பது போல வாழ்வு கடினமானது. நம்பிக்கை இழக்காதே.
* எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராமல் பாடுபாடு.
* உழைப்பு இன்றி செயல் நிறைவேறாது. உழைப்பு ஒன்றே உயர்த்தும்.
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.
* சுயநலத்தை மறந்தவன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறான்.
* தலைவனாக இருப்பதை விட சேவகனாக இருந்து தொண்டாற்றுவது நல்லது.
* தியாகம் செய்ய தயாராக இருந்தால் மற்றவர் இதயத்தை வெல்லலாம்.
* எல்லாத் தீமைகளையும் எதிர்த்து போராடு. அனைவரிடமும் அன்பு காட்டு.
* சில நேரங்களில் இன்பத்தை விடத் துன்பமே சிறந்த ஆசிரியராக உள்ளது.
* பசியால் வாடுவோரிடம் ஆன்மிகம் பேசுவது அவமதிப்பான செயல்.
* உயிர் போகும் வரை கடமையில் இருந்து விலக வேண்டாம்.
* தீய ஆசைகளில் சிக்கினால் அற்ப புழு போல இறக்க நேரிடும்.
* பண்புள்ளனாக வாழ கற்றுக்கொள். பின்னர் பிறரை பண்புள்ளவனாக மாற்று.
* உனக்குள் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது. அதை வெளிக்கொண்டு வா.
உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்