/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மனிதன் இருக்கின்றானா! இறைவன் கேட்கிறான்
/
மனிதன் இருக்கின்றானா! இறைவன் கேட்கிறான்
ADDED : மார் 18, 2013 10:00 AM

* மனஅமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்கள் குற்றங்களை எண்ணிப் பாருங்கள்.
* நம்பிக்கையும், மனஉறுதியும் வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் பெற்றதற்குச் சமமாகும்.
* உங்களால் யாருக்காவது மனமகிழ்ச்சியைத் தரமுடியுமானால் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனோ அவன் புண்ணியவான்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல, மனவலிமையும் போய்விடும். சுறுசுறுப்பால் சோம்பலை துரத்தியடியுங்கள்.
* நாள் முழுக்க பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. இருந்தாலும் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டே கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருங்கள்.
* எல்லாச் செயல்களின் பலனையும், இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள்.
* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை 'மனிதன்' என்று அழைக்க முடியாது. இந்த பண்புகள் இல்லாதவர்களை 'மனிதன்' என்று கடவுளே ஒப்புக்கொள்ள மாட்டார்.
* மனமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும் வாழ்வில் விளைவதில்லை.
* இறைவனின் விருப்பத்தால் தான், உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின்றன. இருந்தாலும் மனிதன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறான்.
* தியானம் செய்வதை அன்றாடக் கடமையாக்குங்கள். அதில் அன்றன்று செய்த நன்மை தீமைகளை நீங்களே எண்ணிப்பார்த்து உங்களை நெறிப்படுத்துங்கள்.
* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.
* சாமான்யன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஞானியோ மரணத்தைக் கண்டு சிரிக்கிறான். இந்த இருவருக்கும் உள்ள வேற்றுமை இது தான்.
* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.
* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.
* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.
* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.
* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில் அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.
* பணத்தின் அளவு கூடக் கூட, மனதில் கறை படியத் தொடங்குகிறது. அதனால், இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழப் பழகுங்கள்.
சாரதாதேவியாரும் கேட்கிறார்