ADDED : நவ 11, 2018 10:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடந்ததைப் பற்றி வருந்தாதே, வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.
* நமக்குத் தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.
* நல்லவர்களின் சொற்கள் மனதிற்கு ஆறுதல் தந்து வாழ்க்கைக்கு ஒளி ஊட்டும்.
* இறையருள் எப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நீயே உணர மறுக்கிறாய்.
* உனக்கு கஷ்டம் வந்தால், அதை கடவுளிடமிருந்து கிடைத்த வரமாகவே கருது.
* உன் கடமைகளை கவனமாகச் செய். பலன்களை கடவுளிடம் விட்டுவிடு.
* தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு. முன்னேற்றம் நிச்சயம் வந்தே தீரும்.
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.
* ஆபத்தான வேளையில் தான் பூரண அமைதி அவசியம்.
* உன் எண்ணங்களில் அவநம்பிக்கை ஏற்படாமல் வெற்றி நடை போடு.
* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது என்பது கடவுளின் பணிக்கு எதிராக போர் தொடங்குவதாகும்.
புத்தி சொல்கிறார் ஸ்ரீஅன்னை