/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சிலையும் நீயே... சிற்பியும் நீயே...
/
சிலையும் நீயே... சிற்பியும் நீயே...
ADDED : நவ 11, 2018 10:13 AM

* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்தத் தகுதியானவன்.
* தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடம் நம்பிக்கை வைக்க முடியாது.
* நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். எதையும் செய்யும் ஆற்றல் நமக்கு இருக்கிறது.
* இந்த பிறவிலேயே கடவுள் தன்மையை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.
* கடவுள் நம்மோடு எப்போதும் இரண்டறக் கலந்திருக்கிறார். அவரை விட்டு நாம் விலகுவதில்லை.
* துாய்மையானவர்கள், நல்லவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும் பாக்கியம் பெறுவர்.
* கடவுளை உணர்ந்த ஞானிகளை உலக நடப்புகள் சிறிதும் பாதிப்பதில்லை.
* மனம் நுட்பமாகும் போது ஆன்மிக அறிவுரையின் உண்மை விளங்கும்.
* சுயநலமின்றி எந்த நேரமும் பணிபுரிபவனே கர்மயோகி.
* மிகப் பெரிய உண்மை இதுவே... வலிமை தான் வாழ்வு, பலவீனமே மரணம்.
* பலவீனத்திற்கு பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது மட்டுமே.
விளக்கம் தருகிறார் விவேகானந்தர்