/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திதி கொடுக்க திருபுட்குழி போங்க!
/
திதி கொடுக்க திருபுட்குழி போங்க!
ADDED : செப் 13, 2019 10:25 AM

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த ராமர், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருபுட்குழியில் விஜயராகவர் என்னும் பெயரில் ஆசி அளிக்கிறார்.
சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை பறவை அரசனான ஜடாயு தடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் இறக்கைகளை ராவணன் வெட்ட, கீழே விழுந்தது ஜடாயு. உயிருக்குப் போராடிய அதை அந்த வழியாக வந்த ராம, லட்சுமணர் கண்டனர். அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதை தெரிவித்ததோடு, தனக்கு ஈமக்கிரியை செய்யவும் கேட்டுக் கொண்டு உயிர் விட்டது. அதனடிப்படையில் இங்கு மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்த கோலத்தில் இருக்கிறார்.
'திரு' என்றால் உயர்ந்த 'புள்' என்றால் பறவை அதாவது ஜடாயு. 'குழி' என்றால் ஈமக்கிரியைக்கு வெட்டும் குழி. இதனால் இத்தலம் 'திருப்புட்குழி' என பெயர் பெற்றது. அம்பினால் ராமர் உருவாக்கிய தீர்த்தமாக 'ஜடாயு புஷ்கரணி' உள்ளது. தனி சன்னதியில் இருக்கும் மரகதவல்லித்தாயார் குழந்தைவரம் அருள்பவர்.
திருவீதி புறப்பாட்டின் போது ஜடாயுவுக்கு முதல் மரியாதை நடக்கிறது. புரட்டாசி மகாளய அமாவாசையன்று இத்தலத்தில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பர்.
எப்படி செல்வது?
* சென்னை - வேலுார் செல்லும் வழியில் 80 கி.மீ.,
* காஞ்சிபுரம் - வேலுார் செல்லும் வழியில் 13 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆவணி பவித்ர உற்ஸவம், தை அமாவாசை தெப்பம், மாசியில் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, திருக்கார்த்திகை
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 044-2724 6501
அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்(15 கி.மீ.,)