
* நல்ல எண்ணத்துடன் ஒரு செயலை செய். வெற்றி பெறுவது உறுதி.
* புகழுக்காக சமூக சேவையில் ஈடுபடாதே.
* மனிதனை திருப்திப்படுத்த அன்னதானம் செய்.
* சொத்தின் மூலம் கிடைக்கும் சுகம் தற்காலிகமானது.
* எல்லோரிடமும் அன்பு காட்டு. குறிப்பாக கெட்டவரிடம் அன்பு காட்டு.
* முன்னோர் வகுத்த தர்மம், நியாயத்தை கடைபிடி. அதுவே நிம்மதிக்கான வழி.
* தன்னை யாரென்று வெளிப்படுத்தாமல், செயல்புரிவதே தொண்டிற்குரிய லட்சணம்.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமையே இருக்காது.
* மனிதப் பிறவி எடுத்ததே, பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு தான்.
* வார்த்தைகளை கவனமாக பயன்படுத்து. பிரச்னை என்பதே வராது.
* தன் நலத்தோடு, பிறர் நலத்தையும் நாடுபவன் உத்தமன்.
* பிறரை திருத்த கோபப்படாதே. மீறினால் அது உனக்கே தீங்காக முடியும்.
* மற்றவர்களது குறைகளை அன்பால் திருத்து. அதற்கு பலன் உண்டு.
* பேச்சில் பொதுநலம்; செயலில் சுயநலம் என பலரும் வாழ்கின்றனர்.
* ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்வதை விட, அதற்கு நீயே எடுத்துக்காட்டாக இரு.
சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர்

