sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நிலை உயரும் போது பணிவு கொள்

/

நிலை உயரும் போது பணிவு கொள்

நிலை உயரும் போது பணிவு கொள்

நிலை உயரும் போது பணிவு கொள்


ADDED : அக் 20, 2017 03:52 PM

Google News

ADDED : அக் 20, 2017 03:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் நிலை எவ்வளவு உயர்ந்தாலும் மனமும், உடம்பும் அறிவுக்கு பணிந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.

* உண்மையைப் பேசு. நல்லதைச் செய். தெய்வத்தை நம்பு. வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்வாய்.

* உலகம் கடவுளின் விளையாட்டுமைதானம். இங்கு அவன் நடத்தும் செயல்கள் பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது.

* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண் உடையவன்.

* நேர்மை தவறாமல் வாழ்வதோடு, பிறருக்கு உதவி செய்ய விரும்புபவரே மேலானவர்.

* ஊர் மக்களின் ஒற்றுமை, கோயிலால் நிறைவேறுகிறது. வீட்டில் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

* மனத்தளர்ச்சிக்கு சிறிதும் இடம் தரக் கூடாது. மனம் உற்சாகத்துடன் இருந்தால் உடம்பில் சுறுசுறுப்பும், ஆற்றலும் பெருகும்.

* சிறு வயதில் ஏற்படும் எண்ணங்கள் மிகவும் வலிமை மிக்கவை. அவற்றை எளிதில் யாராலும் அசைத்து விட முடியாது.

* அநியாயத்தை அநியாயத்தால் எதிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அநியாயத்தை நியாயத்தாலும், அதர்மத்தை தர்மத்தாலும் வெற்றி கொள்ள வேண்டும்.

* அச்சம் இருக்கும் வரை மனிதன் அறிவாளியாக முடியாது.

சொல்கிறார் தேசியக்கவி






      Dinamalar
      Follow us