sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு

/

'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு

'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு

'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு


ADDED : செப் 27, 2018 02:27 PM

Google News

ADDED : செப் 27, 2018 02:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.5 - பிறந்தநாள்

* பசித்திரு - கடவுளின் அருளுக்காக ஏங்கி பசி உணர்வுடன் இரு.

* தனித்திரு - எப்போதும் தனிமையை நாடி மனதில் அமைதியைப் பெருக்கு.

* விழித்திரு - கடவுளின் அருள் எப்போது கிடைக்குமோ என்று விழிப்புடன் காத்திரு.

* எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை அறிவதே பக்தி.

* அன்பு, அறிவு, அருள் உள்ளவன் தானாகவே கடவுளின் நிலைக்கு உயர்ந்து விடுவான்.

* உத்தமனின் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக குடியிருக்கிறார்.

* எல்லாம் கடந்தவர் கடவுள். எனவே கற்பனைக்குள்ளும் அவரை யாரும் அடக்க முடியாது.

* இன்பம், துன்பம் என்னும் அனுபவங்களை உடம்பு மூலம் உயிர் பெறுகிறது.

* எல்லாம் கடவுள் செயல் என்பதை உணர்ந்தால் துன்பமோ கவலையோ இல்லை.

* கடவுளை அடைய தியானமே சிறந்த வழி. தியானப்பயிற்சியை அன்றாட கடமையாக கொள்.

* மனிதப்பிறவியை பயனுள்ளதாக்கு. எப்போதும் நற்செயல்களில் ஈடுபடு.

* மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறொன்று பேசுபவனின் நட்பை நாடாதே.

* அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என சாதிப்பாகுபாடு எதற்கு.

* ஆணவம் எனும் பேய் பிடித்தால், இதயத்தில் நடனமாடும் அறிவு என்னும் கடவுளை தரிசிக்க முடியாது.

* நல்லவர் மனம் நடுங்கும்படி ஒருபோதும் நடப்பது கூடாது.

* தானம் கொடுக்கா விட்டாலும் தவறில்லை; ஆனால் கொடுப்பவரை தடுக்காமல் இரு.

* நண்பரிடத்தில் ஒருபோதும் வஞ்சக எண்ணத்துடன் பழகாதே.

வழிகாட்டுகிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us