/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு
/
'ப'சித்திரு 'த'னித்திரு 'வி'ழித்திரு
ADDED : செப் 27, 2018 02:27 PM

அக்.5 - பிறந்தநாள்
* பசித்திரு - கடவுளின் அருளுக்காக ஏங்கி பசி உணர்வுடன் இரு.
* தனித்திரு - எப்போதும் தனிமையை நாடி மனதில் அமைதியைப் பெருக்கு.
* விழித்திரு - கடவுளின் அருள் எப்போது கிடைக்குமோ என்று விழிப்புடன் காத்திரு.
* எல்லா உயிர்களிலும் கடவுள் இருப்பதை அறிவதே பக்தி.
* அன்பு, அறிவு, அருள் உள்ளவன் தானாகவே கடவுளின் நிலைக்கு உயர்ந்து விடுவான்.
* உத்தமனின் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக குடியிருக்கிறார்.
* எல்லாம் கடந்தவர் கடவுள். எனவே கற்பனைக்குள்ளும் அவரை யாரும் அடக்க முடியாது.
* இன்பம், துன்பம் என்னும் அனுபவங்களை உடம்பு மூலம் உயிர் பெறுகிறது.
* எல்லாம் கடவுள் செயல் என்பதை உணர்ந்தால் துன்பமோ கவலையோ இல்லை.
* கடவுளை அடைய தியானமே சிறந்த வழி. தியானப்பயிற்சியை அன்றாட கடமையாக கொள்.
* மனிதப்பிறவியை பயனுள்ளதாக்கு. எப்போதும் நற்செயல்களில் ஈடுபடு.
* மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறொன்று பேசுபவனின் நட்பை நாடாதே.
* அனைவரும் ஒருநாள் இறப்பது உறுதி. அதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என சாதிப்பாகுபாடு எதற்கு.
* ஆணவம் எனும் பேய் பிடித்தால், இதயத்தில் நடனமாடும் அறிவு என்னும் கடவுளை தரிசிக்க முடியாது.
* நல்லவர் மனம் நடுங்கும்படி ஒருபோதும் நடப்பது கூடாது.
* தானம் கொடுக்கா விட்டாலும் தவறில்லை; ஆனால் கொடுப்பவரை தடுக்காமல் இரு.
* நண்பரிடத்தில் ஒருபோதும் வஞ்சக எண்ணத்துடன் பழகாதே.
வழிகாட்டுகிறார் வள்ளலார்