sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!

/

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்!


ADDED : மார் 14, 2018 04:11 PM

Google News

ADDED : மார் 14, 2018 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்களில் அன்பு இருந்தால் மட்டுமே கற்சிலையில் தெய்வத்தை தரிசிக்க முடியும். உள்ளத்தில் அன்புள்ளவர்கள் எல்லா உயிர்களையும் கடவுளாகவே கருதுவர்.

* உலகில் காண்பதெல்லாம் முதலில் அழகாக தெரியும். ஆனால் அறிவுக்கண்ணை திறந்து பார்த்தால் உண்மை புரியும்.

* இருப்பதை கொண்டு வாழ தெரிந்தவனுக்கே அமைதி, தன் வாசலை திறக்கும். அந்த வாசலை அடைந்தவர்கள் மேலான வாழ்வை எட்டி விட்டனர் என்பது பொருள்.

* மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனே உயர்ந்தவன். எது வந்தாலும் மகிழ்வுடன் ஏற்று வாழ்க்கையை திறம்பட அவனால் நடத்த முடியும்.

* தீய ஆசைகளை நீக்கினால், பரபரப்பு, பதட்டம் உண்டாகாது. எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

* அறியாமை போல் துன்பம் தருவது வேறில்லை. அறியாமையுடன் இருக்கும் மனிதன் மதிப்பு இழந்து கீழான நிலையை அடைவான்.

* கீழ்குணம் படைத்த மனிதர்கள், சாப்பிடுவதிலும், குடிப்பதிலும், பொருட்களைச் சேர்ப்பதிலும் வீணாக காலத்தை கடத்துகிறார்கள்.

* நடுநிலை தவறாதவன் இன்பத்தை கண்டு துள்ளவோ, துன்பத்தை கண்டு துவளவோ மாட்டான்.

* சாந்தமே ஒருவனுக்கு பேரழகு தரும். ஏனெனில் அது தான் குணத்தில் உயர்ந்து விளங்குகின்றது.

* அறிவு என்னும் சிங்கம், மனதில் உண்டாகும் காட்டு யானை போன்ற பெருந்தவறை கூட கிழித்து எறிந்து விடும்.

* தீயவர்களை விட்டு விலகு. அவர்கள் காற்று கூட நம்மை தீண்டாமல் பார்த்து கொள்வது அவசியம்.

* சத்தியத்தை தேர்ந் தெடுப்பவன் முதலில் புறக்கணிப்பது பொய் தான். அது இருந்தால் சத்தியத்தின் நிழல் கூட உன் மீது விழாது.

* நல்லவர்களின் நட்பே உண்மையான செல்வம். அதுவே எல்லா நன்மைகளையும் வாரி வழங்கும்.

- ராமரின் குரு வசிஷ்டர்சொல்கிறார்






      Dinamalar
      Follow us