sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அமைதியுடன் வாழ...

/

அமைதியுடன் வாழ...

அமைதியுடன் வாழ...

அமைதியுடன் வாழ...


ADDED : பிப் 28, 2020 02:25 PM

Google News

ADDED : பிப் 28, 2020 02:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போற்றுதலையோ, துாற்றுதலையோ செவி சாய்க்காமல் இருப்பதே அமைதிக்கான வழி.

* நெருப்பின்றி எப்படி சமையல் இல்லையோ அது போல ஞானம் இன்றி மோட்சம் இல்லை.

* ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளைக் காண முடியும்.

* தர்மம் செய்வதால் மனம் துாய்மை பெறுவதோடு புண்ணியமும் சேரும்.

* செல்வம் என்பது பணம் சேர்ப்பதல்ல. எதிலும் மனநிறைவு காண்பதே.

* உதட்டில் வெளிப்படாமல் உள்ளத்தில் வெளிப்படுவதே உண்மையான சிரிப்பு.

* கெட்டதைச் செய்பவன் பார்வையற்றவன்; நல்லதை கேட்காதவன் கேட்கும் திறன் இல்லாதவன்.

* இனிமையாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாதவன் பேசத் தகுதியில்லாதவன்.

* பேச்சை குறைப்பது, உடைமையைத் துறப்பதே துறவுக்கு அடிப்படை.

* பொருள் மீது பற்று குறைய நல்லோருடன் பழக வேண்டும்.

* எப்போதும் சந்தோஷமாக இருப்பவனே முமுமையான மனிதன்.

* ஒளியின்றி எப்படி காண முடியாதோ, அது போல ஆராய்ச்சி இன்றி அறிவைப் பெற முடியாது.

* மனிதனின் வாழ்வு, இறப்பு, வறுமை, செழுமை எல்லாம் கடவுளின் செயல்.

* பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் தோற்றமே என்னும் தெளிவு வேண்டும்.

* கருமித்தனம் இருப்பவனிடத்தில் எல்லா நற்குணங்களும் அழியும்.

* ஒருவனின் ஆணவம் பெரும் தீமைகளை விளைவிக்கும்.

* மற்றவரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே நாம் காண வேண்டும்.

வழி காட்டுகிறார் ஆதிசங்கரர்






      Dinamalar
      Follow us