ADDED : மார் 05, 2020 08:15 AM

* நல்லவர் ஒருவரும் இல்லாத நிலையில் உலகில் மழை பெய்வது நிற்கும்.
* எண்ணம், சொல், செயலால் மனிதன் அடக்கத்தை பழக வேண்டும்.
* கடவுளுக்கு படைத்த பின்னரே தினமும் உணவைச் சாப்பிட வேண்டும்.
* தர்ம வழியில் தேடிய பணத்தில் வேதம் விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.
* எப்போதும் கடவுளின் திருநாமம் சொல்வோருக்கு குறையேதும் ஏற்படாது.
* தர்மம் என்னும் தோணியில் பயணித்தால் வாழ்க்கை என்னும் கடலை எளிதாக கடக்கலாம்.
* பேராசை கொண்டவனுக்கு அறிவு ஒருபோதும் வேலை செய்யாது.
* கோபத்தை குறைத்தால் எல்லா துன்பங்களில் இருந்து விடுபட முடியும்.
* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்யும்.
* தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு வாழ்வில் பிடிப்பு ஏற்படாது.
* வேதத்தின் முடிவு உண்மை. உண்மையின் முடிவு அடக்கம். அடக்கத்தின் முடிவு மோட்சம். இதுவே முடிவான தீர்மானம்.
* கலியுகத்தில் செய்யும் தவம், பிரம்மசரியம், ஜபத்தால் குறுகிய காலத்தில் அதிக பலன் கிடைக்கும்.
* தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் வாழ்கிறார்.
* சந்தேகம் இன்றி கடவுளைச் சரணடைவது ஒன்றே கல்வியின் பயன்.
சொல்கிறார் வியாசர்