/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்
/
அன்புதான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்
ADDED : செப் 16, 2018 08:00 AM

* தீமை செய்தவருக்கு நன்மை செய்வதே உத்தமர் வழக்கம்.
* உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்.
*நற்செயல் என்ற நிலத்தை சீர்படுத்தி, கடவுளின் திருநாமம் என்ற விதையை விதையுங்கள்.
* வாழ்வில் உய்வதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. கடவுளிடம் பக்தி கொண்டு நல்லவனாக வாழ்வதே.
* நான் என்ற எண்ணம் இருக்கும் வரை உன்னால், உன்னை அறிய முடியாது.
* எல்லாம் கடவுள் மயமாக இருக்கும் போது அவருக்கு எதைக் காணிக்கையாக்கினாலும் பெருமை உண்டாகாது.
* யுகம் யுகமாக ஆராய்ந்தாலும் சரி யாராலும் கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது.
* உள்ளத்தில் மவுனம் இல்லாவிட்டால், வெளியுலகில் ஊமையாக இருந்தாலும் மனம் அமைதி பெறாது.
* உலகிலுள்ள பணம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.
* மனம் கடவுளிடம் தஞ்சம் அடையாத வரை உலக ஆசைகளில் இருந்து விடுபட முடியாது.
* அதிகாலையில் நடத்தும் பிரார்த்தனை, செயல்பாடுகளுக்கு ஆற்றல் அதிகம்.
அறிவுறுத்துகிறார் குருநானக்