sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அன்பே சிவம்! சிவமே அன்பு!

/

அன்பே சிவம்! சிவமே அன்பு!

அன்பே சிவம்! சிவமே அன்பு!

அன்பே சிவம்! சிவமே அன்பு!


ADDED : பிப் 25, 2014 05:08 PM

Google News

ADDED : பிப் 25, 2014 05:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மெய்ப்பொருளாகிய சிவம் என்பது இயங்கும் போது சக்தியாகிறது. சக்தி தன் இயக்கத்தை நிறுத்தும்போது சிவமாகி விடுகிறது.

* எந்தப் பொருளைப் பார்த்தாலும், மெய்ப்பொருளான சிவமாகிய கடவுளையே பார்க்கப் பழகுங்கள். இதனால், 'நான்' என்னும் சிறிய எண்ணம் அற்றுப் போய் விடும்.

* அன்பும் சிவமும் இரண்டும் ஒன்றே. சிவமாகிய இறைநிலையை உணர்ந்தால், மனம், அன்பு நிலையில் மலரத் தொடங்கும்.

* உலகில் நிகழும் ஒவ்வொன்றும் கடவுளின் செயலே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இயற்கை, நீதி, தர்மம் இவற்றுக்கு முரண்படாமல் வாழ முடியும்.

* கடமையை உணர்ந்து செயலாற்றினால், சமுதாயத்தில் எல்லா மக்களின் உரிமையும், நலமும் காக்கப்படும்.

* கடமையில் சிறந்தவன் கடவுள் நாட்டமுடையவனாக இருப்பான். கடவுளை உணர்ந்தவன் கடமையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.

* உள்ளத்தில் கருணை, உடையில் ஒழுக்கம், நடையில் கண்ணியம் இவையே நல்லோரின் அடையாளங்கள்.

* ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் உழையுங்கள். வாழ்வில் உயர்வு அடைவீர்கள்.

* கடவுளே எல்லாமுமாக இருக்கிறார். நமக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப்பிணைப்பு இருக்கிறது.

* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வில் துன்பமே அதிகமாகும்.

* இன்பம் பெற வேண்டுமானால், உணவு, உறக்கம், உழைப்பு, எண்ணம் என ஒவ்வொன்றையும் சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இனிய மொழி பேசுபவர்கள், உலகையே வசப்படுத்துவதோடு, வெற்றிகரமான வாழ்வு நடத்தும் ஆற்றல் பெற்றிருப்பர்.

* பிறக்கும் போது யாரும் எதுவும் கொண்டு வந்ததில்லை. போகும் போதும் கொண்டு போவதும் இல்லை. இந்த சமுதாயமே நமக்கு வாழ்வு அளித்துக் கொண்டிருக்கிறது.

* அறிவாற்றல், உடல் ஆற்றல் இரண்டாலும் முடிந்த செயல்களை, சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டியது மனிதனின் கடமை.

* 'வாழ்க வளமுடன்' என்று ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது, பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது.

* பிறருக்கு நன்மையைச் செய்வதும், பயன் பெற்றவர்கள் நிறைவோடு வாழ்த்துவதும் தான் உண்மையான புகழாகும்.

* உண்மையில் மனிதனுக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்றால், அது அவன் உள்ளத்தில் எழுகின்ற ஒழுங்கற்ற எண்ணம் தான்.

* எண்ணத்தில் உறுதியும், ஒழுக்கமும் ஏற்பட்டு விட்டால், எண்ணிய அனைத்தையும் எண்ணிய படியே பெற்று மகிழலாம்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதையே அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.

* உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் நம் மனதில் தான் இருக்கிறது. தன்னைத் தானே சீர்படுத்திக் கொண்டு விட்டால், இந்த மண்ணிலுள்ள எல்லா இன்பமும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.

* வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், எதிர் வரும் பிரச்னையை நேருக்கு நேர் துணிவுடன் மோதும் அணுகுமுறை வேண்டும்.

* ஆசையை அடியோடு ஒழித்து விடுவது இயலாத காரியம். ஆசையை சீர்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் குறைந்து விடும்.

சொல்கிறார் வேதாத்ரி மகரிஷி






      Dinamalar
      Follow us