sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பக்திசெலுத்த ஏற்ற காலம்!

/

பக்திசெலுத்த ஏற்ற காலம்!

பக்திசெலுத்த ஏற்ற காலம்!

பக்திசெலுத்த ஏற்ற காலம்!


ADDED : செப் 15, 2017 01:48 PM

Google News

ADDED : செப் 15, 2017 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இளம் மூங்கில் சுலபமாக வளையும். முற்றிய மூங்கில் வளைத்தால் ஒடிந்து விடும். இளமை காலமே பக்தியில் ஈடுபடுவதற்கான இனிய காலம்.

* வெளியுலகில் கடவுளைத் தேடுபவன் அறியாமையில் கிடக்கிறான். தனக்குள்ளேயே கடவுள் இருப்பதை அறிபவனே அறிவில் சிறந்தவன்.

* ஆணவம் எளிதில் நம்மை விட்டு போவதில்லை. உடல் என்பது இருக்கும் வரை அதன் அடையாளம் சிறிதளவாவது இருக்கவே செய்யும்.

* தண்ணீரில் இட்ட கோடு போல, வந்த வேகத்தில் கோபத்தை மறந்து விட வேண்டும். அதுவும் பிறர் நலனுக்காக கோபம் வெளிப்பட வேண்டும்.

* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கு எதுவுமே இல்லை. கடவுளை முழுமையாக நம்பி விட்ட பிறகு யாரையும்

நம்பத் தேவையில்லை.

* தன்னை மட்டும் திறமைசாலியாக கருதுவது மூடத்தனம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கவே செய்யும்.

* விடாமுயற்சியுடன் மனதை அடக்கியவர்களால் மட்டுமே, தனிமையிலும், கூட்டத்திலும் கடவுளை சிந்திக்க முடியும்.

* உண்மையை உணர்த்தும் சாஸ்திர நூல்களை படிப்பதை விட கேட்பது நல்லது. அனுபவத்தின் வாயிலாக உண்மையை அறிவது இன்னும் நல்லது.

சொல்கிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us