ADDED : செப் 30, 2020 04:21 PM

* எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கப் பழகு.
* அறிவுக்கு வேலை கொடுத்தால் கோபம் வராது.
* தியானத்தில் ஈடுபடுபட்டால் அமைதியுடன் வாழலாம்.
* கடவுள் எதிர்பார்ப்பது பக்தி மட்டுமே.
* பிறரிடம் உள்ள குற்றத்தையே சிந்தித்தால் குற்றவாளி ஆவாய்.
* எந்தளவுக்கு பற்று குறைகிறதோ, அந்தளவுக்கு நிம்மதி.
* மனதில் துாய்மை இருந்தால் அது பார்வையில் வெளிப்படும்.
* ஆன்மிகத்தில் சாதனை படைக்க இளமைக்காலமே ஏற்றது.
* நம்பிக்கையுடன் பாடுபட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* யாரையும், எந்த வேலையையும் துச்சமாக கருதக் கூடாது.
* பிரச்னைக்கு காரணம் பணமே.
* பாவம் செய்யத் துாண்டுகிறது பணம்.
* நம்பிக்கையும், மன உறுதியும் வாழ்வின் அடிப்படை அம்சங்கள்.
* துறவு மனப்பான்மை இல்லாவிட்டால் பணத்தின் மீதுள்ள மயக்கம் தீராது.
* மனதை துாய்மைபடுத்தும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு உண்டு.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.
ஊக்கப்படுத்துகிறார் சாரதாதேவியார்