ADDED : செப் 04, 2020 05:33 PM

செப்.5 - பிறந்த தினம்
* பேசுவதை விட சில நேரத்தில் மவுனத்தால் அதிக நன்மை கிடைக்கும்.
* மனம், உடலைப் போல மனிதன் உயிருக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
* மனித தன்மை நிறைவு பெறும் நிலையில் ஆன்மிகத்தின் உச்சியை அடையலாம்.
* பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆன்மிகம் கல்வி அவசியம்.
* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனத்தில் தள்ளி விடும்.
* ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம்.
* கல்வியாளராக இருந்தாலும் ஆன்மிக சிந்தனை இல்லாவிட்டால் பயனில்லை.
* கடவுளை தேடுவதாக இருந்தால் உங்களின் இதயத்தில் தேடுங்கள்.
* சுயநலத்தை ஒழித்தால் சமுதாயமே உயர்ந்து விடும்.
* நம் குணத்தை உருவாக்குவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு.
* வெளியில் தெரியும் வறுமையை விட, மனதிலுள்ள வறுமையே அபாயமானது.
* ஆயுதத்தை விட தீய கருத்து அதிக தீமையை ஏற்படுத்தும்.
* பழி வாங்கும் எண்ணத்துடன் யாரையும் அணுகக் கூடாது.
* விருப்பு வெறுப்பு இல்லாத மனிதன் நலமுடன் வாழ்வான்.
* கட்டுப்பாடும், கடும் உழைப்பும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சொல்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்