/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி
/
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி
ADDED : பிப் 10, 2017 11:36 AM

பிப்.18 ராமகிருஷ்ணர் பிறந்த தினம்
* உலகின் முதலாளியாக கடவுள் ஒருவரே இருக்கிறார். நாம் அவருக்கு பணிவிடை செய்யும் ஊழியர்களாக இருக்கவே இந்த மண்ணில் பிறந்திருக்கிறோம்.
* பூமியின் நான்கு திசைகளிலும் பயணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை எங்கும் காண முடியாது. இருப்பது எல்லாம் உங்களின்
உள்ளத்திலேயே இருக்கிறது.
* வீடு கட்டும் போது சாரம் அவசியம். கட்டி முடித்த பின் அது தேவை இல்லாமல் போய்விடும். அதுபோல பக்தியின் தொடக்கத்தில் சிலை வழிபாடு அவசியம். பக்தியில் பக்குவம் அடைந்தபின் அது தேவையில்லை.
* அன்றாடப் பணிகளில் ஈடுபட அதிகாலைப் பொழுது பொருத்தமானது. மனிதன் ஆன்மிக வழியில் மனதைச் செலுத்த இளமைப்பருவம் பொருத்தமானது.
* கடின உழைப்பும், முயற்சியும் உள்ளவனுக்கு எல்லாமே கிடைக்கும். இந்தப் பண்புகள் இல்லாவிட்டால், உலகில் ஒன்றுமே கிடைக்காது.
* எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுவே வாழ்வில் துன்பம் உண்டாகக் காரணம்.
* உங்களுடைய வழிபாட்டு முறைகளில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டிருங்கள். ஆனால் மற்றவர் மீது வெறுப்பு சிறிதும் கொள்வது கூடாது.
* கடவுளை வெளியுலகில் தேட வேண்டாம். அவர் நமக்குள் இருப்பதை உணர்வதே அறிவு. இந்த உண்மையை அறிந்தவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடி ஒற்றுமையை நிலைநாட்டுவர்.
* பிறருடைய குற்றம், குறைகளில் மனதைச் செலுத்துபவன் காலத்தை வீணாக்குகிறான். தன்னுடைய குறைகளைத் திருத்திக் கொள்பவன் வாழ்வைப் பயனுள்ளதாக்குகிறான்.
* உலகின் மூலமாக இருக்கும் ஒன்றைத் தெரிந்து கொண்டால் போதும். பிறகு எல்லாம் தெரிந்து விடும். ஒன்று என்னும் இலக்கத்துடன் சேரும் பூஜ்யமும் மதிப்பு பெறுவது போல கடவுளை அறிந்தால் தான் மனிதனுக்கே மதிப்பு.
* பழுத்த மரம் கனிகளைச் சுமப்பதால் எப்போதும் தாழ்ந்து நிற்கும். மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டுமானால் பணிவுள்ளவனாக இருக்க வேண்டும்.
* பணம் யாருக்கு அடிமையோ, அவனே உண்மையான மனிதன். பணத்தால் உணவு, உடைகளைப் பெற முடியுமே தவிர ஞானத்தை வாங்க முடியாது.
* அதிகம் படித்தவன் விவாதம் செய்வதில் ஈடுபாடு கொள்கிறான். மனதை கடவுளிடம் ஒருமுகப்படுத்தியவன் பேச்சை விட செயலையே மதிக்கிறான்.
* கடவுள் மனிதனை எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே காண்கிறார். அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே கடவுளின் அருளும் வெளிப்படுகிறது.
* படிப்பதை விட கேள்வி கேட்பது சிறந்தது. கேட்பதை விட நேரில் காணும் அனுபவம் உயர்ந்தது.
* தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய பிறகும் மனம் பக்தியில் ஈடுபடாவிட்டால், யாத்திரை சென்றதால் ஒருபயனும் உண்டாகவில்லை என்றே பொருள்.
சொல்கிறார் குருதேவர்

