sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

முதல் யுகத்தில் எழுந்த கோயில்

/

முதல் யுகத்தில் எழுந்த கோயில்

முதல் யுகத்தில் எழுந்த கோயில்

முதல் யுகத்தில் எழுந்த கோயில்


ADDED : ஜன 10, 2020 10:27 AM

Google News

ADDED : ஜன 10, 2020 10:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகிலுள்ள குருடு மலையில் லட்சுமி கணபதி கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை, முதல் யுகமான கிருத யுகத்தில் மும்மூர்த்திகளால் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உருவாக்கப்பட்டது.

காலப்போக்கில் இங்கு வழிபாடு இல்லாமல் இருந்தது. ஒருநாள் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றிய விநாயகர், குருடு மலையில் தான் இருப்பதாகவும், அங்கு கோயில் கட்டுமாறும் உத்தரவிட்டார். அக்கோயிலே தற்போது வழிபாட்டில் உள்ளது. சாளக்கிராம கல்லினால் ஆன மூலவர் சிலையின் உயரம் 11 அடி. கிழக்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் முயற்சி வெற்றி பெறும். கருவறைக்கு அருகில் பார்த்தால் சுவாமி சிலை சிறியதாகவும், வாசலுக்கு அருகில் இருந்து பார்த்தால் பெரியதாகவும் தோன்றுவது வித்தியாசமானது. அஸ்திவாரம் இல்லாமலேயே சமதளமான பாறையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரி, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய வில்வம் தல மரமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் கல்வெட்டுகள் உள்ளன. ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள் கூட்டமாக வழிபட்டதால் 'கூட்டாத்திரி மலை' என அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் 'குருடு மலை' என்றானது.

ஜனவரி 1 'மகா பஞ்சாமிர்த அபிஷேகம்' நடக்கும். ரத சப்தமியன்று (பிப்.1) 13 கி,மீ., சுற்றளவு கொண்ட மலையைச் சுவாமி சுற்றி வருவார். பிப்ரவரி கடைசி ஞாயிறன்று வெண்ணெய் அலங்காரமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்ஸவமும் நடக்கும். கார்த்திகை மாத குமார சஷ்டியன்று 1,108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம், 1,108 சகஸ்ர மோதக ஹோமம், 1,108 வடைகளால் ஆன மாலை சாத்தி பூஜை நடத்துவர்.

இங்கு வழிபடுவோருக்கு திருமணத்தடை நீங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமைக்காக 'மண்டல பூஜை' நடத்துகின்றனர்.

இங்கு தரப்படும் சந்தனத்தை பூசினால் செல்வம் பெருகும். ராகு, கேது தோஷம் அகல விநாயகருக்கு ஏலக்காய் மாலை சாத்துகின்றனர். நினைத்தது நிறைவேற 1,008 அல்லது 10,008 மோதகம் படைக்கின்றனர்.

எப்படி செல்வது

* பெங்களூரு - திருப்பதி சாலையில் 80 கி.மீ., துாரத்தில் முல்பாகல். இங்கிருந்து 10 கி.மீ.,

* சென்னையில் இருந்து சித்துாருக்கு 160 கி.மீ., அங்கிருந்து 80 கி.மீ., துாரத்தில் முல்பாகல். இங்கிருந்து 10கி.மீ.,

* ரயிலில் வருபவர்கள் பங்கார்பேட்டையில் இறங்கி 40 கி.மீ, துாரத்தில் கோயிலுக்கு வரலாம்.

* விமானத்தில் வருபவர்கள் பெங்களூரு அல்லது திருப்பதியில் இறங்கி வரலாம்.

* முல்பாகல், குருடு மலையில் தங்கும் வசதிகள் உள்ளன.

நேரம்: காலை 7:00 - பகல் 2:00 மணி; பகல் 3:00 - இரவு 7:00 மணி

தொடர்புக்கு: 99458 80990, 86652 22949

அருகிலுள்ள தலம்: திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் (90 கி.மீ.,)






      Dinamalar
      Follow us