sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விஸ்வரூப வீரபத்திரர்

/

விஸ்வரூப வீரபத்திரர்

விஸ்வரூப வீரபத்திரர்

விஸ்வரூப வீரபத்திரர்


ADDED : பிப் 02, 2018 01:47 PM

Google News

ADDED : பிப் 02, 2018 01:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

32 கைகளுடன் கூடிய, விஸ்வரூப வீரபத்திரரை பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில் தரிசிக்கலாம். பிரளய கால வீரபத்திரர் என்பது இவரது பெயர். சிறிய குன்றின் மீது இந்த கோயில் உள்ளது.

தல வரலாறு

சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதை தட்டிக் கேட்ட பார்வதியையும் அவமதித்தான் தட்சன். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக 32 கைகளுடன் கூடிய விஸ்வரூப வீரபத்திரரை உருவாக்கி, யாக குண்டத்தை அழித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32 கைகளுடன் 'பிரளய கால வீரபத்திரர்' சிலை வடித்து கோயில் எழுப்பப் பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் சிதிலமடைந்து மறைந்தது.

இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன், ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னக் கண்டான். புதரை விலக்கியபோது, வீரபத்திரர் சிலை அங்கு இருந்தது. அதை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் கட்டினான்.

தேங்காய் துருவல் அலங்காரம்

ஒரு சிறிய மலை (குன்று) மீது அமைந்த இக்கோயிலில் உள்ள வீரபத்திரர் மழு, நாகம், சூலம், பாணம், சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்திய நிலையில் காட்சியளிக்கிறார். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர். செவ்வாய் கிழமைகளில் வீரபத்திரருக்கு, ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள் வீரபத்திரருக்கு துளசி, வில்வம், நாகலிங்க பூ மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து, போளி நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் கடைசி செவ்வாயன்று, தேங்காய்த்துருவல் சாத்தி அலங்காரம் செய்வர். இத்தலத்தில் வீரபத்திரர் உக்கிரமாக இருப்பதால், இவரை சாந்தப்படுத்த இவ்வாறு செய்கின்றனர்.

உமா மகேஸ்வரர்

சுவாமி சன்னதியின் வலப்புற குன்றில், வீரஆஞ்சநேயர் காட்சி தருகிறார். வீரபத்திரர் சன்னதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் இருக்கிறார். நந்திதேவர், இவரது பாதத்தை பிடித்தபடியும், அருகில் விநாயகர், முருகன் வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பாகும். மகாலிங்கம், பார்வதிக்கு சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சன்னதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகிறார்.

எப்படி செல்வது: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ.,

விசேஷ நாட்கள்: கார்த்திகை செவ்வாய்க்கிழமை, மகா சிவராத்திரி

நேரம்: காலை 8:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி

தொலைபேசி: 080 - 2661 8899

அருகிலுள்ள தலம் பெங்களூரு இஸ்கான் கோயில்






      Dinamalar
      Follow us