sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பக்தி இருக்குமிடத்தில் பகை இருப்பதில்லை

/

பக்தி இருக்குமிடத்தில் பகை இருப்பதில்லை

பக்தி இருக்குமிடத்தில் பகை இருப்பதில்லை

பக்தி இருக்குமிடத்தில் பகை இருப்பதில்லை


ADDED : ஜன 03, 2020 01:06 PM

Google News

ADDED : ஜன 03, 2020 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

* கடவுளைப் பூஜிப்பதால் மனம் துாய்மை அடைவதோடு புண்ணியமும் உண்டாகிறது.

* எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழி..

* ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும் பொது நியாயத்தைச் செய்வது நல்லது.

* சாப்பிடும் போது 'கருணையுடன் அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என சிந்திப்பது நல்லது.

* பக்தியோடு உண்பதால் நல்லெண்ணம் வளரும். இந்த பழக்கம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

* உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே.

* மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். இதை 'கர்ம கோட்பாடு' என்கிறோம்.

* அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

* மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது.

* அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், பாவ விஷயங்களில் மனம் ஈடுபடாது.

* கல்வியை பணிவுடன் மாணவன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் பயன் உண்டாகாது.

* கடவுளின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தியானம் செய்யுங்கள்.

சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us