
டிச.5 - மறைவு தினம்
* உள்ளத்தில் உண்மை இருந்தால் விருப்பம் விரைவில் நிறைவேறும்.
* கடவுளின் அடிமையாக வாழ்ந்திடு. அவரை மறப்பது நரகத்தை விடக் கொடியது.
* கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறார். நற்செயல்களே அவருக்கான வழிபாடு.
* கடவுளின் கையில் நல்ல கருவியாக இருப்பதை விட பெருமை வேறில்லை.
* நல்ல செயல்களை உடனடியாக செய்வது நல்லது.
* கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல.
* அன்பும், ஆற்றலும் தனித்து இருந்தால் உலகம் வளர்ச்சி அடையாது.
* எந்த சூழலிலும் மன அமைதியை இழக்காதே.
* தன் நலத்துடன் பொது நலத்தையும் சிந்திக்க வேண்டும்.
* கடந்த காலம் பற்றி சிந்திப்பது வீண். அதனால் மனம் தளர்ச்சி அடையும்.
* அறியாமை என்னும் இருள் வெளியேறினால் தான் மனதில் தெய்வீகம் வெளிப்படும்.
* கடவுளின் ஆணைப்படி நடக்க வேண்டியது நடந்தே தீரும். பயமில்லாமல் இரு.
* துன்பத்தால் வருந்தினாலும் அதுவும் உன் நன்மைக்காகவே.
* ஒவ்வொரு உண்மையும் வெளிப்படுவதற்கான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறது.
சொல்கிறார் அரவிந்தர்