ADDED : நவ 24, 2017 09:35 AM

* நீயும், நானும் மட்டுமல்ல... உலகிலுள்ள அனைவரும் பொம்மை போல கடவுளின் கையில் இருக்கிறோம். அவர் எப்படி வைத்தாலும் அதை ஏற்பது நம் கடமை.
* தன்னம்பிக்கை மனதில் இருந்தால், உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வரத் தொடங்கும்.
* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்குங்கள்.
* மனம் அமைதி பெற விரும்பினால், பிறரை குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவரே புண்ணியவான்.
* சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள்.
*நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிகிறார். அவரிடம் எதையும் கேட்காதீர்கள்.
சொல்கிறார் சாரதாதேவியார்