
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மகாவிஷ்ணுவைப் பிரியாமல் இருக்கும் மகாலட்சுமியை சரணடைந்தால் பண பிரச்னை வராது.
* வாழை, மாவிலை, எலுமிச்சம்பழத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால் இவற்றை சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துகிறோம்.
* யானை, குதிரையின் முகத்தில் மகாலட்சுமி இருக்கிறாள்.
* மகாவிஷ்ணுவின் அருள் பெற மகாலட்சுமியை சரணடையுங்கள்.
* ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியவள் மகாலட்சுமி.
* மகான் வேதாந்த தேசிகர் 'ஸ்ரீஸ்துதி' என்னும் பாடலில் 'மங்களம் தருபவள்' எனப் போற்றுகிறார்.