நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யமுனை நதிக்கரையில் கண்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதியைக் கண்டதும் நீராடும் எண்ணம் வந்து விடும். நீராடியதும் பசியெடுக்கும். கண்ணனும், அவனது நண்பர்களும் சாப்பிட வட்டமாக உட்காருவர். வெண்ணெய், பால், தயிர்ச்சோறு, பழங்களை இலைகளில் வைத்து உண்பர்.
கேலியும், கிண்டலுமாக சிரித்து மகிழும் அவர்களைக் கண்ட வானுலக தேவர்கள், 'இந்த குழந்தைகள் என்ன தவம் செய்தார்களோ? இந்த பாக்கியம் நமக்கு இல்லையே' என ஏங்குவர்.
கண்ணனும், ஆயர் சிறுவர்களும் அமர்ந்திருக்கும் காட்சி ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல இருக்கும்.