நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மஞ்சள் வஸ்திரத்தை கோயில் பூஜைக்கு கொடுத்தால் குருவருள் சேரும்.
* குரு என்றால் குற்றத்தை நீக்குபவர், இருளை போக்கி ஒளி தருபவர், அறியாமை போக்கி அருள் பாய்ச்சுபவர் எனப் பொருள்.
கு - குற்றம்,
ரு - நீக்குபவர்.
* எந்தச் செயலை செய்தாலும் அதை குருவின் மூலமாக செய்தால் முழுப்பலன் தரும். எண்ணம், சொல், செயலால் பக்குவம் அடைந்தவருக்கு குருநாதராக சிவபெருமானே எழுந்தருள்வார்.
* குருநாதருக்கு செய்யும் உதவி ஆயிரம் அஸ்வமேத யாகத்திற்கு சமம்.