
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில்களில் பூஜை நேரத்தில் சிலர் வழிபாட்டில் ஈடுபடாமல், வீண் விஷயங்களை பேசுவதுண்டு. இது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். இந்த வீண்பேச்சு காதில் விழாமல் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் பூஜையின் போது மணிகள் ஒலிக்கப்படுகின்றன. கோயில் மணி அடிக்கும் போது அது ஊர் முழுவதும் கேட்கும். இதனால் தீயசக்திகள் மறையும். மணியோசையை கூர்ந்து கேட்டால் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலிப்பதை உணர முடியும்.