நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகருக்கு 'ஸ்கந்த பூர்வஜன்' எனப் பெயர் உண்டு. இதற்கு 'கந்தனுக்கு மூத்தவன்' என பொருள். சிவலோகத்தில் உள்ள பூத கணங்களின் தலைவர் என்பதால் 'கணபதி' எனப்படுகிறார்.
செயலில் தடை ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவமே. இதற்குரிய தண்டனையாக தடைகளை ஏற்படுத்துபவர் என்னும் பொருளில் 'விக்னேஸ்வரர்' என்கிறோம். தடையை போக்குபவரும் அவரே. 'விக்னம்' என்றால் 'தடை'. பெரிய வயிறு கொண்டவர் என்பதால் 'லம்போதரன்' எனப்படுகிறார். இந்த உலகமும், உயிர்களும்
அவரது வயிற்றில் அடங்கியிருப்பதால் பானை வயிறனாக இருக்கிறார்.

