sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விலை உயர்ந்த பேனா

/

விலை உயர்ந்த பேனா

விலை உயர்ந்த பேனா

விலை உயர்ந்த பேனா


ADDED : ஆக 21, 2025 02:05 PM

Google News

ADDED : ஆக 21, 2025 02:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏதோ இந்தக் காலத்தில் படிப்புக்கு அதிகம் பணம் செலவழிப்பதாக நினைக்கிறோம். புராண காலத்திலேயே ஒரு பேனாவுக்கு ஆயிரம் பொன் விலை கொடுத்தவர் விநாயகர் என்பது தெரியுமா?

வியாசர் விவரிக்க இருக்கும் மகாபாரத கதையை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும் என விநாயகர் விரும்பினார். ஆனால் அவரிடம் ஏடோ, எழுத்தாணியோ இல்லை. விநாயகர் மகாபாரதம் எழுதும் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அவர் ஏட்டில் எழுதவில்லை.

மகாபாரதத்தை எழுத ஏராளமான ஏடுகள் வேண்டும் என்பதால் ஒரு திட்டம் தீட்டினார் விநாயகர். இமயமலையின் பாறைகளில் எழுதுவது என முடிவு செய்தார். மலைப்பாறையில் எழுத கனமான எழுத்தாணி வேண்டுமே! அதற்கும் அசரவில்லை. வலிமையான தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக கொண்டார்.

யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பர். தந்தத்தின் மதிப்பால் உருவான பழமொழி தானே இது. உலகிலேயே ஒரு எழுத்தாணிக்காக (பேனா) ஆயிரம் பொன் செலவழித்தவர் விநாயகர் மட்டுமே.






      Dinamalar
      Follow us