sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வரம் தரும் பாடல்

/

வரம் தரும் பாடல்

வரம் தரும் பாடல்

வரம் தரும் பாடல்


ADDED : அக் 24, 2025 07:47 AM

Google News

ADDED : அக் 24, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்த வினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் முக்கியமானது கந்தசஷ்டி விரதம்.

குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப்பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார். இதை 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும். வசிஷ்ட முனிவரிடம் இருந்து இந்த விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் பின்பற்றினர்.

'செகமாயை உற்று' என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

இந்த திருப்புகழை தினமும் படித்தால் குழந்தை வரம் கிடைக்கும்.

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த

திருமாது கெர்ப்ப ...... முடலுாறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி ...... லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த

மணிவாயின் முத்தி ...... தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு

முலைமேல ணைக்க ...... வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

மொழியேயு ரைத்த ...... குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த

தனியேர கத்தின் ...... முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்

சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.






      Dinamalar
      Follow us