sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நலம் நீயே... பலம் நீயே...

/

நலம் நீயே... பலம் நீயே...

நலம் நீயே... பலம் நீயே...

நலம் நீயே... பலம் நீயே...


ADDED : பிப் 19, 2024 01:30 PM

Google News

ADDED : பிப் 19, 2024 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாயில்லா ஜீவன்களில் முதலில் போற்றப்படுவது பசு. அடிவயிற்றில் இருந்து 'அம்மா' என குரல் கொடுக்கும் அது நமக்கு அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது பாலுாட்டி உயிரூட்டியவள் நம்மை பெற்றெடுத்த தாய். வாழ்நாள் முழுவதும் நமக்கு பால் தருபவள் கோமாதா எனப்படும் பசு.

இதனால் தான் அன்பும் சாந்தமும் நிறைந்த பசுவைப் பார்த்தால் பெற்ற தாயை பார்ப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. அதுமட்டுமல்ல. பசுவின் பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், நெய் ஆகியவை உடலிற்கு பலம் தருகிறது. இதற்காகவே முன்னோர்கள் கோமாதாவின் மீது அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.

ஆனால் சிலர் பால் தரும் காலத்தில் பசுவை பராமரித்து விட்டு, கறவை நின்றதும் அதை புறக்கணிக்கின்றனர். இப்படி செய்வது மகா பாவம். கனவிலும் இதைச் செய்யக் கூடாது. மேலும் பசு இறந்த பின்னும் கூட பயன்தருகிறது.

அதன் வயிற்றில் இருந்து கிடைக்கும் 'கோரோசனை' என்னும் வாசனை திரவியம் பூஜை பொருளாகவும், மருந்தாகவும் உள்ளது. ஆனால் உயிருடன் வாழும் காலத்தில் பசுவை துன்புறுத்தினால் அதன் உடலில் கோரோசனை சுரக்காது.






      Dinamalar
      Follow us