
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகரை வணங்காமல் எந்த பணியையும் தொடங்குவதில்லை. அதுபோல, 'பிள்ளையார் சுழி' (உ)போட்டுத் தான், எதையும் எழுதத் தொடங்குவர். அந்தக் காலத்தில் 'ஸ்ரீ கணாதிபதியே நம:' என்று சொல்லியோ எழுதியோ தான் தினசரி பணிகளை ஆரம்பிப்பது வழக்கம். இதனால், செயல்கள் தங்கு தடையின்றி எளிதாக நிறைவேறும் என்பது ஐதீகம். 'சிவகணங்களின் தலைவனாக விளங்கும் கணபதியை வணங்குகிறேன்' என்பது இதன் பொருள்.