sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஆதி சங்கரர்

/

உலகம் யாருக்கு கட்டுப்படும்?

/

உலகம் யாருக்கு கட்டுப்படும்?

உலகம் யாருக்கு கட்டுப்படும்?

உலகம் யாருக்கு கட்டுப்படும்?


ADDED : டிச 13, 2007 06:09 PM

Google News

ADDED : டிச 13, 2007 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன் என்பவன் விவேகி.

சம்சாரத்தில் சாரமாக இருப்பது எது? அடிக்கடி இதை நினைத்துக் கொண்டிருப்பதேயாகும். 'சம்சாரத்தில் ஏது சாரம்' என்று நினைத்துக் கொண்டே இருந்தால் பற்றைவிட்டுப் பிறப்பை அறுக்கலாம்.

சூரன் என்பவன் துன்மார்க்கத்தில் மனம் போகாமல் மனதை அடக்குகிறவன்; பெண்களின் பார்வைகளான பாணங்களால் அடிபடாதவன். சமர்த்தன் என்பவன் பெண்களின் நடையினால் வஞ்சிக்கப்படாதவன். குருடன் என்பவன் படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன். செவிடன் என்பவன் இதத்தை நல்லதை கேட்காதவன்.

இந்தப் பிரபஞ்சம் பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு மட்டுமே வசப்படும்.

லட்சுமி சுறுசுறுப்பான சித்தமுடையவனையும், நீதி தவறாத நடையுடை பாவனையுடையவனையுமே விரும்புவாள். முயற்சி செய்பவனுக்கே பயன் கிடைக்கும்.

இரவும் பகலும் சிந்திக்கத்தக்கது ஈஸ்வரனுடைய பாதார விந்தங்களே; மனிதரால் எப்போதும் ஸ்மரிக்கத் தக்கது ஹரிநாமமே! சம்சாரமல்ல. கண்ணிருந்தும் குருடர் நாஸ்திகரே.

எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது உலோபம் எனும் கருமித்தனமே. எந்தப் பொருள் நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறதோ அதுவே உயர்மதிப்புள்ள செல்வம்.

ஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கே ஐஸ்வரியம் உண்டாகும். உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் ஆரோக்கியம். செய்யக் கஷ்டமானது மனதை இடைவிடாது தடுத்துக் கட்டிப் போடுவதே.



Trending





      Dinamalar
      Follow us