
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை காமதேனு போன்றது. அது கேட்ட வரமெல்லாம் நமக்கு வழங்க காத்திருக்கிறது.
* தனக்குத் தானே நண்பனாக விளங்குபவனின் நட்பையே இந்த உலகம் விரும்பும்.
* தன்னைத் தானே வெறுப்பது கூடாது. அவனை உலகமும் வெறுத்து ஒதுக்கி விடும்.
* தைரியம் மாமருந்து போன்றது. தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என இரு அர்த்தமுண்டு.
* பக்தி கனிந்து பக்குவம் பெற்ற பின்னரே, கடவுளிடம் கேட்ட வரம் கிடைக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
* கல்லில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் கடவுளின் அம்சமே.
- பாரதியார்
(இன்று பாரதியார் பிறந்தநாள் )