sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

பயத்தை அகற்றும் கணபதி

/

பயத்தை அகற்றும் கணபதி

பயத்தை அகற்றும் கணபதி

பயத்தை அகற்றும் கணபதி


ADDED : ஜூன் 20, 2010 04:06 PM

Google News

ADDED : ஜூன் 20, 2010 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மூல முதற்பொருளே! மணக்குளத்து விநாயகரே! உம் திருவடியே சரணம் என்று அடைக்கலம் கொண்டு விட்டோம். நாயினும் இழிவான நாங்கள், பல பிழைகளைச் செய்து மிகவும் களைத்திருக்கிறோம். அவற்றைப் பொறுத்துக் கொள்ளும்படி உன் ஒளி பொருந்திய மலர்ப்பாதங்களை வணங்கித் துதிக்கிறோம்.

* கேட்டதை வழங்கும் கற்பகவிநாயகரே! அருளை வாரி வழங்கும் ஆனைமுகத்தோனே! உலகம் யாவையும் படைத்தவரே! குருவே! சந்திரனைத் தலையில் சூடிய ஈசனின் மைந்தரே! உம் திருவடிகளை எங்கள் சிந்தையில் என்றும் வைப்போம்.

* உம்மை வழிபடும் எங்களுக்கு எட்டுத்திக்கும் வெற்றிக்கொடி நாட்டும் உயர்வாழ்வு வேண்டும். பகையே கூடாது. துயரில்லாத வாழ்க்கை வேண்டும். அறிவு வளர வேண்டும். வீரம் பெருக வேண்டும்.

* கருணைக்கடலே! உன்னருள் பெற்ற எங்களுக்கு அச்சம் என்பது சிறிதும் இல்லை. கடலே பொங்கி வந்தாலும் பயம் இனி இல்லை.

* வான்புகழ் பெற்ற மறைகளின் தலைவரே! எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தையும், எல்லாரும் இன்புற்று வாழும் வரத்தையும் அருள வேண்டும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us