sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்புவழியில் நடப்போம்

/

அன்புவழியில் நடப்போம்

அன்புவழியில் நடப்போம்

அன்புவழியில் நடப்போம்


ADDED : மே 20, 2013 10:05 AM

Google News

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதில் அச்சத்திற்கு இடம் அளிக்கக் கூடாது. உச்சிவானம் இரண்டாகப் பிளந்து நம் மீது விழுந்தபோதும் அச்சம் கொள்ளக்கூடாது.

* உலகில் ஜாதிகள் இரண்டைத் தவிர வேறில்லை. நீதிவழியில் வாழும் நேர்மையானவர்கள் மேல்ஜாதியினர். மற்றவர்கள் கீழ் ஜாதியினர்.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.

* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

* இருப்பது ஒரே தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரமாயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.

* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us