
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தை பயத்திற்கு இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.
* உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
* உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்.
* சென்றதை சிந்திப்பதை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.
* கல்லில் மட்டும் கடவுள் இருப்பதில்லை. எல்லா உயிர்களிலும் அவரே குடியிருக்கிறார்.
- பாரதியார்