sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

வளமும் புகழும் கிடைக்கட்டும்

/

வளமும் புகழும் கிடைக்கட்டும்

வளமும் புகழும் கிடைக்கட்டும்

வளமும் புகழும் கிடைக்கட்டும்


ADDED : செப் 21, 2010 06:09 PM

Google News

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவின் உருவமாய் ஒளிர்கின்ற கண்ணா! என் உயிரை அழியாமல் பாதுகாப்பாய். என்னுள்ளே கருவினைப் போல் வளர்ந்து அருள்செய்பவனே! தாமரையில் வீற்றிருக்கும் திருமகளோடு இருப்பவனே!

திருமகளிடம் இணைந்திருப்பது போல என் உயிரோடு இரண்டறக் கலப்பாயாக.

* என் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே!

இவ்வுலகம் அழியும் காலத்தில் அசுரர்களின் தலைகள்

சிதறும்படியாகச் செய்து எங்களைக் காப்பாற்று.

* தேவர்கள் வணங்கும் பெருமானே! உன்னைத் துணையாகப் போற்றி வழிபடுகிறேன். கடலில் இருந்து எழுகின்ற சூரியனைப் போல, என் உள்ளக்கடலில் இருந்து நீ எழுந்து வர வேண்டும்.

* கரியவண்ணம் கொண்டவனே! உன் திருவடியைப் போற்றிடும் என் உள்ளம் அழியாத பேரின்பத்தினை பெறட்டும். வளமும், செல்வமும், பெருமையும், புகழும் உன்னருளால் எனக்கு கிடைக்கட்டும்.

* உனது பெருமைகளைப் பாடினால் தீமை சிதைந்து

பெருநன்மை விளையும். நிலமகளின் தலைவனாகிய கண்ணனே! உன் புகழை என் மனம் என்றும் பாடிக்கொண்டிருக்கும்.

* கண்ணா! காக்கை சிறகினில் உன் கரிய நிறத்தைக் கண்டேன், பார்க்கும் பச்சை மரங்களில் உன் பசுமை நிறத்தை கண்டேன்.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us