
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பதே கண்களால் பெற வேண்டிய பயனாகும்.
* அநியாயம் செய்வதை உலகம் கைவிட்டால், மீண்டும் மண்ணில் தர்மம் தழைத்து கிருதயுகம் உண்டாகும்.
* துளியும் பிறரை ஏமாற்றுவதில்லை என்ற பரிபூரண நிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.
* காலம் பணவிலை உடையது என்ற பழமொழி இருக்கிறது. பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடாது. இதை நம்மவர்கள் புரிந்து கொள்வதில்லை.
* நல்ல விஷயத்தைத் தள்ளிப்போடுவது கூடாது. நினைத்த அளவிலேயே அதற்கான நடவடிக்கையில் இறங்குவது நல்லது.
பாரதியார்