
<P>* சத்தியத்தையே தீபமாக உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். அடைக்கலமாக ஒருவன் சத்தியத்தை சரணாகதி அடைந்து விட்டால், அதன் பின் வேறொன்றையும் சரணடைய வேண்டியதில்லை.<BR>* ஒருவன் தானே தனக்குத் தலைவன். வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? தன்னை நன்றாக அடக்கப்பழகிக் கொண்டவன் பெறுவதற்கு அரிய நல்லபேறுகளை அடையத் தகுதியுடைவனாகிறான்.<BR>* கரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டில் மழைநீர் இறங்குவதில்லை. அதுபோல, நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனதில் வீணான ஆசைகள் புகுவதில்லை.<BR>* மனிதனின் வாழ்க்கையை அவனுடைய மனோதர்மமே நிர்ணயம் செய்கிறது. நல்ல எண்ணத்தையே சிந்திக்கும் ஒருவனை நிழல்போல இன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும். <BR>* நல்ல எண்ணங்களால் தன் உள்ளத்தை தூய்மையாக்கிய நிலையில் மனமானது, ஆழமான,அமைதியான ஏரியைப் போல் தூய்மையும், நிம்மதியும் பெற்றுவிடும். <BR>* மடிமை என்னும் சோம்பலில் வாழவேண்டாம். மூடர்கள் மட்டுமே சோம்பலில் மூழ்கி விடுவார்கள்.<BR>* பரிசுத்தமான ஒழுக்கம் மனிதனை அபாயங்களில் இருந்தும், நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்தும் பாதுகாக்கும். வாழ்வில் உயர்நிலைகளை அடைய ஏணிபோல தூயஒழுக்கம் உதவுகிறது. <BR><STRONG>புத்தர்</STRONG></P>