ADDED : மார் 31, 2013 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் 'உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர்.
* சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும்.
* மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது போல, உலகத்தின் வேரான இறைவனும் மறைந்திருக்கிறார்.
* கல்விக்கு அழகு பணிவு. முற்றிய நெல்கதிர் தலை சாய்ந்து இருப்பது போல, அறிவில் பழுத்தவர்கள் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்வர்.
* மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவன்.
* பக்தியும் தொண்டும் இணைந்த வாழ்வே ஆன்மிகத்தின் அடிப்படை. இந்த குணங்கள் நாணயத்தின் இருபக்கம் போல இருக்கின்றன.
- கமலாத்மானந்தர்